×

பெண்ணிடம் நகை, ₹19 ஆயிரம் அபேஸ்

ஓசூர், மே 10: ஓசூர் மத்திகிரி அந்திவாடி பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி(38). இவர், அந்திவாடியில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கைப்பையை மர்மநபர் ஒருவர் திருடிச்சென்றார். அந்த நபரை பிடிக்க முயன்றும் அவர் தப்பியோடி விட்டார். அந்த கைப்ைபயில் ₹19ஆயிரம் பணம் மற்றும் செல்போன், அரைபவுன் தோடு ஆகியவற்றை வைத்திருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண்ணிடம் நகை, ₹19 ஆயிரம் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Nandini ,Madhigiri Andhiwadi ,Andhiwadi ,
× RELATED கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து...